நாங்குநேரி வன்முறை....காரணம் திமுக கவுன்சிலர் தான்...அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

DMK BJP K. Annamalai
By Karthick Aug 13, 2023 05:46 AM GMT
Report

 நாங்குநேரியில் நடைபெற்ற வன்முறைக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி வன்முறை  

annamalai-shocking-comments-on-nanguneri--incident

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில், சாதிய காழ்புணர்ச்சியால் சக மாணவனை பள்ளி மாணவர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமுற்ற மாணவன் மற்றும் அவனது சகோதரி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கவுன்சிலர் தான் காரணம் 

annamalai-shocking-comments-on-nanguneri--incident

இந்நிலையில், என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் ஒரு பகுதியாக விளாத்திகுளம் வந்தடைந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை அளித்துள்ளார். நாங்குநேரியில் வன்முறையில் ஈடுபட்ட மாணவன் தன்னுடைய பெரியப்பா திமுகவின் ஒன்றிய செயலாளர் என கூறி பள்ளி வளாகத்திற்கு புகுந்து சகமாணவனை வெட்டி இருக்கிறார் என குறிப்பிட்டு, இதையெல்லாம் பார்க்கவேண்டிய வெட்கக்கேடான ஆட்சியில் தமிழகம் இருக்கிறது என பரபரப்பாக கூறினார்.