பெரியார் சிலப்பதிகாரத்தை பத்தி சொன்னது தெரியுமா? கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி
பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தை படிக்கவேண்டும் என கனிமொழி மக்களைவையில் கூறிய நிலையில், அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழி Advice
மணிப்பூர் விவகாரம் குறித்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தில் உரையாயற்றிய மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, சிலப்பதிகாரத்தை பிரதமர் மோடி படிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அண்ணாமலை பதிலடி
இந்நிலையில், நடைபயணத்தின் போது இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், பெரியார் சிலப்பதிகாரத்தை குறித்து கனிமொழிக்கு தான் கூறவிரும்புவதாக குறிப்பிட்டு, பெரியாரின் உரையை கூறினார்.
கடந்த 1951ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சேலத்தில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய தந்தை பெரியார், கணவன் கோவலன் இறந்த நிலையில் கோவம் கொண்ட கண்ணகி ஒரு பக்கத்துக் கொண்டையை எடுத்து மதுரை மீது எறிகிறாளாம், அது உடனே தீப்பிழம்பாக மாறி மதுரையையே சுட்டு எரிக்கிறதாம், இதை நம்ப முடிகிறதா? பாண்டிய மன்னன் செய்த தவறுக்கு மதுரை மக்கள் என்ன செய்வார்கள், இதுதான் கற்புக்கரசிக்கு இலக்கணமா?" என பெரியார் சுட்டிக்காட்டினார் என்பதை அண்ணாமலை குறிப்பிட்டார்.
We urge DMK MP Smt @KanimozhiDMK avl to read what their ideologue Periyaar had to say about Silapathigaram before advocating our Hon PM Thiru @narendramodi avl to read it. pic.twitter.com/RXn0V7R0Ha
— K.Annamalai (@annamalai_k) August 12, 2023