முதல்வரானால் முதல் கையெழுத்து இது தான்.....தடாலடியாக சொன்ன அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் தமிழகத்திற்கு முதல்வரானால், தன்னுடைய முதல் கையெழுத்து இது தான் என தனியார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றார். கடந்த 28-ஆம் தேதி துவங்கிய இந்த பாதயாத்திரை தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் அவர் தனியார் யூடியூப் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டி இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
முதல் கையெழுத்து இது தான்
அப்போது நெறியாளர் அண்ணாமலை நீங்கள் முதல்வரானால், முதல் கையெழுத்து எது என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, தனக்கு இது போன்று ஒரு நாள் முதல்வன் என்ற பேச்சில் நியாயம் இல்லை என குறிப்பிட்டு, ஆனால் அவ்வாறு பாஜகவில் இருந்து ஒருவர் முதல்வரானால், நிச்சயம் முதல் கையெழுத்து அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி தான் கிடைக்கவேண்டும் என இருக்கும் என அதிரடியாக குறிப்பிட்டார்.
அதே போல அனைத்து குழந்தைகளுக்கும் சமமான ஆரம்ப சுகாதார கிடைக்கும் படியும் தங்களது இரண்டாவது கையெழுத்தாக இருக்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.