காவிரி நீர் தரமுடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது - அண்ணாமலை பேட்டி
காவிரி நீர் தரமுடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் விவகாரம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை காட்டுவோம் என்று கர்நாடகா துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் கூறியதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது . இதற்கு தமிழக அரசு எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதனின் மகள் திருமண விழாவிற்கு சென்ற அண்ணாமலை அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது " காவிரி நீர் தர முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது, காவிரி நீர் இல்லை என்று சொன்னால் தமிழகத்தில் எப்படி சாகுபடி நடைபெறும்? இந்த விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவர்களும் எந்தவிதமான கண்டனததையும் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள்.
மேலும், அரசியல் லாபத்திற்காக தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டின் நலனையும், விவசாயிகளின் நலனையும் அடமானம் வைப்பது பாஜக எந்தக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது என்றும் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பங்கேற்றால் கருப்பு கொடி காட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.