ஃபாயஸ்தீன் யாரோட காலேஜ்'ல படிக்குறாரு தெரியுமா..? கொந்தளித்த அண்ணாமலை
நீட் விவகாரத்தில் மரணமடைந்த ஜெகதீஸ்வரனுக்காக குரல் கொடுத்த நண்பர் ஃபாயஸ்தீன் யாருடைய கல்லூரியில் பயில்கிறார் என்று தெரியுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் மரணம்
சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற தவறிய ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொள்ள, அடுத்த தினமே அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நண்பனை இழந்த ஃபாயஸ்தீன் செய்தியாளர்களிடம் தன்னுடைய கோபத்தை அழுத்தமாக வெளிப்படுத்தினர். அவருடைய பேச்சுக்கள் கவனம் பெற்ற நிலையில், தற்போது பலரும் நீட் விவகாரத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்ணாமலை ஆவேசம்
இந்நிலையில், பாதயாத்திரை செய்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இதுதொடர்பாக கூறுகையில், "தற்கொலை செய்துகொண்ட மாணவனின் நண்பர், அவரே 25 லட்சம் ரூபாய் கொடுத்து தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக குறிப்பிருப்பதை குறிப்பிட்டு, அவர் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் நடத்தும் பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் சேர்ந்து படித்து வருகிறார் என பரபரப்பு தகவலை கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தனியார் கல்லூரிகளுக்கு திமுகவினருக்கு லைசென்ஸ் அளித்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக தான் திமுகவிற்கு நீட் தேர்வின் மீது கோபம் என்றும் அவர் குறிப்பிட்டார்.