முடிவடைந்த டெல்லி பயணம்...பாதயாத்திரியை தள்ளிவைத்த அண்ணாமலை ..? இது தான் காரணமா.?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 16-ஆம் தேதி வரை திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை
நிகழ்ந்து வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து பேசினார். கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு அதிமுக கூட்டணி இல்லாமல் எதிர்கொள்ளும், மற்றொரு கூட்டணியை அமைப்பது எவ்வாறு போன்ற பல சவால்கள் தமிழக பாஜகவிற்கு முன்னிருக்கும் நிலையில்,இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
புது கூட்டணி குறித்து பாஜக தற்போது எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் எழுந்திருக்கும் நிலையில், நேற்று பாஜகவின் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதற்கிடையில் வரும் 6-ஆம் தேதி துவங்குவதாக இருந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரை இரண்டு வார காலம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர். இதன் காரணமாக பாதயாத்திரை தேதி மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் நாளை நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.