டெல்லிக்கு காவடி தூக்கும் அடிமை அண்ணாமலை - சீமான் கடும் சாடல்

BJP K. Annamalai Seeman
By Sumathi Jun 07, 2022 03:58 PM GMT
Report

டெல்லிக்கு காவடித் தூக்கும் அடிமைதான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

 சீமான் 

டெல்லிக்கு காவடி தூக்கும் அடிமை அண்ணாமலை - சீமான் கடும் சாடல் | Annamalai Is A Slave Seeman Action

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

காவடித் தூக்கும் ஒரு அடிமை

அப்போது பேசிய அவர், அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டெல்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை. ஈழத்தை பெற்றுக் கொடுப்பேன் என அமித் ஷா, நரேந்திர மோடி என்னிடம் கூற வேண்டும்.

டெல்லிக்கு காவடி தூக்கும் அடிமை அண்ணாமலை - சீமான் கடும் சாடல் | Annamalai Is A Slave Seeman Action

8 ஆண்டுகளாக ஈழத்தை பற்றி பேசாத பிரதமர் நரேந்திர மோடி இப்போது பேசப் போகிறாரா? என விமர்சித்துள்ளார். மேலும், தன்னுடன் வந்து சீமான் போராடுவார் என திடீரென அண்ணாமலை கூறுகிறார்.

திடீரென அவருக்கு ஈழத்தின் மீது பாசம் வந்துள்ளது. அவர் வேறெதும் செய்ய வேண்டாம்; விடுதலை புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

ஒருவேளை பாஜக – திமுக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தால், அண்ணாமலையை மாற்றி விட்டு வேறு தலைவரைதான் நியமிப்பார் என தெரிவித்துள்ளார்.