1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கும் - அண்ணாமலை
நடைப்பயணத்தின் போது, கன்னியாகுமரியில் மக்களிடையே உரையாற்றிய அண்ணாமலை, 1000 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 28-ஆம் தேதி துவங்கிய "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் ஒரு பகுதியை கன்னியாகுமரி மாவட்டத்தை வந்தடைந்துள்ளார். நேற்று வில்லுக்குறி சந்திப்பு பகுதியில் மக்களிடையே உரையாற்றிய அவர், தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஆணிவேரே குடும்பம் தான் என்றும், அந்த குடும்ப ஆட்சியே தற்போது திமுக தான் என விமர்சித்தார்.
நீட்டை தடுக்க முடியாது
தமிழகத்தில் இது வரை 6 முறை ஆட்சி செய்தபோது 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக ஆட்சி தந்துள்ளதுள்ளது என குறிப்பிட்ட அவர், ஆனால் பிரதமர் மோடி தமிழகத்திற்கு அதிகளவில் மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார் என தெரிவித்தார்.
30 ஆயிரம் கோடி ஊழல் என பேசிய அமைச்சர் பிடிஆரை நிதி அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினார்கள் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும் என்றும் திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது என ஆவேசமாக தெரிவித்தார்.