உதயநிதி UPSC பாஸ் பண்ணட்டும்..நான் அரசியலை விட்டே போயிடுறேன்...அண்ணாமலை அதிரடி
கவர்னர் ஆர்.என்.ரவி பதவி தொடர்பாக பேசும் உதயநிதி எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு குரூப் 4 தேர்வை எழுதி, பாஸ் செய்யட்டும் பார்ப்போம் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
உதயநிதி அதிரடி
திமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில், ஆவேசமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்த ஜெயித்து காட்டட்டும் என சவால் விட்டார்.
இந்த கருத்திற்கு பாஜக தலைவர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை சவால்
தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து 41 ஆவது நாளாக திருநெல்வேலியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அதனை முடித்து கொண்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது உதயநிதி கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, கவர்னர் ஆர்.என்.ரவி பதவி தொடர்பாக பேசும் உதயநிதி எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு குரூப் 4 தேர்வை எழுதி, பாஸ் செய்யட்டும் செய்தால் தான் அரசியலை விட்டே ஒதுங்கிவிடுகிறேன் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.