தொட்டுப்பார்... சீண்டிப்பாருன்னு பேசுனா இப்படி தான் ஆகும்... அண்ணாமலை ஆவேசம்!
திமுக உண்ணவிரத போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
சந்திராயனுக்கு வாழ்த்துக்கள்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, சந்திரயான் 3 வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, இந்தியாவின் வெற்றி என்று குறிப்பிட்டார்.நடைபயணம் மூலம் சாதி வெறியை தூண்டுவதாக பொன்முடி மற்றும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனத்திற்கு பதிலளித்த அவர்,. நடக்க முடியாதவர்கள் தன் நடைப்பயணத்தை விமர்சிப்பதாக குறிப்பிட்டார்.
காவிரி விவகாரம்
காவிரி ஆணையம் கூறியதை செய்தால் எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டிய அண்ணாமலை, காவிரி விவகாரம் இந்த அளவுக்கு தீவிரமடைந்ததற்கு தமிழக அரசே காரணம் என குற்றம்சாட்டினார். இரு மாநில மக்களின் உணர்வை தூண்டிவிட்டுள்ளனர் என சாடி, எந்த அசம்பாவிதமும் இந்த காவிரி பிரச்சனையால் ஏற்பட்டு விடக்கூடாது என தெரிவித்துக்கொண்டார்.
நீட் தேர்வு மற்றும் ஆளுநர் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை சரியாக செய்துள்ளார் என கூறி, குடியரசுத் தலைவரிடம் தான் அரசு முறையிட வேண்டும் என கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் கவர்னரை வம்புக்கு இழுக்கின்றனர் என்றும் தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் கவர்னரை நோக்கி பேசுகிறார்கள் என குற்றம்சாட்டினார். கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள். கும்மிடிப்பூண்டியை தாண்ட முடியாது என தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.