வாய் பேச்சு, அறிக்கை இல்லாமல் நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு தயாராக வந்து இருக்கிறோம் - அண்ணாமலை

BJP K. Annamalai
By Thahir Jul 14, 2023 06:43 AM GMT
Report

திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார்.

நீதிமன்றத்தில் அண்ணாமலை 

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இந்த நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறி அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜரானார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எம்.பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பபட்டது.

Annamalai appeared in court in defamation case

தயாராக வந்து இருக்கிறோம்

DMK Files 1 வந்த பிறகு திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் உட்பட அனைவரும் அவதுாறு வழக்கு போட்டு இருந்தனர்.

இந்த நிலையில் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதற்காக நான் நேரில் ஆஜராகி இருக்கிறேன்.

பாஜகவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் இன்று அடுத்த கட்டத்தை நோக்கி சென்று இருக்கிறது. வாய் பேச்சாக இல்லாமல், அறிக்கையாக இல்லாமல் நீதிமன்றத்தில் சந்திப்பதற்கு அதற்கு தயாராக வந்திருக்கிறோம் என்றார்.