இவுங்க'லாம் வெச்சிட்டு......தலையில் அடித்து கொண்டு புலம்பிய அண்ணாமலை..!!

Tamil nadu DMK BJP K. Annamalai P. K. Sekar Babu
By Karthick Sep 07, 2023 04:50 AM GMT
Report

சனாதன விவகாரத்தில் அமைச்சர் சேகர் பாபு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

சனாதனம் - சேகர் பாபு கருத்து

சனாதனம் விவகாரத்தில், அமைச்சர் சேகர் பாபு இன்னும்10 நாட்களுக்குள் பதவி விலகாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். இது குறித்து அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ‘’தனக்கு பதவி வழங்குவது, பறிப்பது என அனைத்து உரிமையும் முதல்வருக்கு மட்டுமே உள்ளது என்று கூறி, இதில் அண்ணாமலைக்கு எந்த உரிமையும் இல்லை என சேகர் பாபு பதிலளித்திருந்தார்.

annamalai-about-sekar-babu

அதே போல நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், சனாதனமும், இந்து மதமும் வாழைப்பழம் போன்றது என சுட்டிக்காட்டி, வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் என்பது வாழைப்பழத்தின் மீதுள்ள தோல் என குறிப்பிட்டு தோலை நீக்கித்தான் பழத்தை சாப்பிட இயலும் என்றும் அதே போல சனாதனத்தில் தேவையில்லாத பகுதிகளை எதிர்ப்பது எங்கள் கொள்கை என தெரிவித்திருந்தார்.

தலையில் அடித்து கொண்ட அண்ணாமலை

இந்நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

annamalai-about-sekar-babu

அதற்கு பதிலளித்த அவர், இனிமேல் சேகர் பாபு வீட்டில் வாழைப்பழம் வாங்கினால், தோலை நீக்கிவிட்டு வெறும் பழத்தையே வாங்கி உட்கொள்ளலாம் என கூறி, அப்படி இல்லையென்றால் இந்து அறநிலைய துறை சார்பில் இருக்கும் கோவில்கள் அனைத்திற்கும் இனி சென்னையில் இருந்து அறநிலைய துறை சார்பில் பழம் அனுப்பப்படும் போது தோலை நீக்கிவிட்டு வெறும் பழத்தை மட்டும் அனுப்பலாம் என கூறி, இது போன்ற முட்டாள்களை அமைச்சர்கள் வைத்து என்ன செய்வது என கூறுவது போல தலையில் அடித்துக்கொண்டார்.