பாஜகவில் நெடுங்குன்றம் சூர்யா...ஒரே போடாக போட்ட அண்ணாமலை..!
நெடுங்குன்றம் சூர்யாவை பாஜகவில் சேர்த்ததை பலரும் விமர்சித்து வரும் நிலையில், அது குறித்து அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
ரவுடிக்கு மாநில பதவியா..?
200க்கும் மேல் குற்ற வழக்குகள் பின்னணி கொண்ட பிரபல ரவுடியாக இருப்பவர் நெடுங்குன்றத்தை சேர்ந்த சூர்யா. இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைத்துள்ளதாகவும், அக்கட்சியில் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது சலசலப்புகளை ஏற்படுத்தியது.
இவரது மனைவியும் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியுமான விஜயலக்ஷ்மி 2021-ஆம் ஆண்டு நெற்குன்றம் ஊராட்சி துணை தலைவராக பதவி ஏற்கும் போது கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தான் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை பதில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து வினவிய போது, நெடுங்குன்றம் சூர்யா கட்சியில் இணைந்தது தனக்கு தெரியாது என கூறி. தான் பாதையாத்திரை சென்று கொண்டிருக்கிறேன் என்றும் கட்சியில் யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து தான் கூறுவதில்லை என்றார்.
அரசியலுக்கு வந்த மூன்றுஆண்டுகளில் இதனை ஒரு பவர் கேமாக பார்க்கிறார்கள் என்ற அவர், அரசியல் மூலமாக ஆதாயங்களை தேடி தான் ஒரு பவர்ஃபுல் மனிதர் என்பதை காட்டுவதற்காக வருகிறார்கள் என்றும் சிலர் தவறாக மனிதர்களாக இருந்தாலும் தன்னை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இதனை பார்க்கிறார்கள் என்றார்.
மேலும், பாஜகவில் அவர் இணையட்டும் என்று வரவேற்ற அண்ணாமலை, நெகட்டிவ் எனர்ஜியை அவர் பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றி அதன் மூலமாக அமைதி பெறட்டும் என்றார். நல்ல ஒரு பாரதத்தை படைப்பதற்கு பாஜகவை பயன்படுத்தி கொள்ளட்டும் என்றும் அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அண்ணாமலை, தவறாக இந்த கட்சியின் அடையாளத்தை பயன்படுத்த மாட்டார் என தான் நம்புவதாக அண்ணாமலை தெரிவித்தார்.