மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேட்டி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 29ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து நடைபயணம் தொடங்கி ஜனவரி 11 தேதி வரை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணம் சென்னையில் முடிவடைய உள்ளது. வருகின்ற 2024 தேர்தலை வைத்து அண்ணாமலை இந்த தேர்தலை மேற்கொள்ள இருக்கிறார்.
தற்போது அண்ணாமலை ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக நியமனம் செய்யப்பட்டு அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ப்ரியன் பேட்டி
இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் அளித்த பேட்டியில் "தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு பாஜகவில் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. தமிழிசை சௌந்தரராஜன், எல் முருகன் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டதைப் போல அண்ணாமலைக்கு பதவி கொடுக்கலாம்.
ஆனால் அவர்களை போல இல்லாமல் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார். பாஜகவை பற்றி செய்தி வரவைக்கிறார், எப்போதும் ஹெட்லைனில் உள்ளார், அவர் சொல்லும் சில விஷயங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் பாஜகவை எப்போதும் லைம்லைட்டில் வைத்திருக்கிறார். 2024 தேர்தல் வரை அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி கொடுக்கலாம் ஆனால் அமைச்சர் பதவி கிடைப்பது கஷ்டம் தான்.
2024 தேர்தலுக்கு பிறகு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து தமிழ்நாட்டில் பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்று ப்ரியன் தெரிவித்துள்ளார்.