? Live: மாண்டஸ் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Tamil nadu Anna University Mandous Cyclone
By Nandhini Dec 09, 2022 12:22 PM GMT
Report

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வழுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

நாகப்பட்டினம் அருகே இருக்கும் இந்த மாண்டஸ் புயல் காரணமாக வடக்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் கனமழை மற்றும் தீவிர காற்று வீசிக்கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கிமீ துாரத்தில் மையம் கொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், வேலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

anna-university-exam-mandous-cyclone-tamilnadu

செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் இறுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.