நிறைவேறாத திருமண ஆசை; கடவுள் மேல் கோபம் கொண்ட இளைஞர் - கோவிலில் பகீர் சம்பவம்!

Uttar Pradesh India Marriage
By Jiyath Sep 05, 2023 02:57 PM GMT
Report

திருமண ஆசை நிறைவேறாததால் இளைஞர் ஒருவர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை திருடியுள்ளார்.

சிவலிங்கம் திருட்டு

உத்திர பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ள கும்ஹியவகா என்ற பகுதியில் பைரவ பாபா சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திடீரென்று சிவலிங்கம் காணாமல் போயுள்ளது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்த்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

நிறைவேறாத திருமண ஆசை; கடவுள் மேல் கோபம் கொண்ட இளைஞர் - கோவிலில் பகீர் சம்பவம்! | Anger At God Because Of His Marriage I

இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த 27 வயதான சோட்டு என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திருடப்பட்ட சிவலிங்கம் மூங்கில் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கோபம் கொண்ட சோட்டு

சோட்டு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 'தனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்று சிவபெருமானிடம் மனமுருகி வேண்டி, ஒரு மாதம் விருதம் இருந்தேன்.

நிறைவேறாத திருமண ஆசை; கடவுள் மேல் கோபம் கொண்ட இளைஞர் - கோவிலில் பகீர் சம்பவம்! | Anger At God Because Of His Marriage I

ஆனால் எனது ஆசை நிறைவேறாத காரணத்தால் சிவபெருமான் மீது கோபம் கொண்டு சிவலிங்கத்தை திருடினேன்' என்று சோட்டு தெரிவித்துள்ளார்.