நான் அழகா இல்லை, என் அண்ணி பின்னாடிதான் எல்லா பசங்களும்.. அங்காடி தெரு நடிகை ஓபன்டாக்!

Tamil Cinema
By Sumathi Feb 01, 2024 07:53 AM GMT
Report

அங்காடி தெரு நடிகை சுகுணா தான் சந்தித்த கஷ்டங்களை மனம் திறந்துள்ளார்.

நடிகை சுகுணா

தமிழ் சினிமாவில் 2010ல் வெளியான படம் அங்காடித் தெரு. இதில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சுகுணா நாகராஜன். சோபியா பாத்திரமாக நடித்தார். அங்காடித் தெருவில் இணை இயக்குநராகப் பணியாற்றிய நாகராஜனை மணந்தார்.

angadi theru sofia

தற்போது பியூட்டி பார்லர் உரிமையாளராக உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் அழகாக இல்லை என்று உணர்கிறேன். எல்லாப் பையன்களும் என் அண்ணிக்குப் பின்னால் தான் இருந்தார்கள். ஆனால் எனக்குப் பின்னால் ஒரு நபர் கூட இல்லை.

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

பிச்சைக்காரர்களுடன் படுக்க வைத்த பிரபல இயக்குநர் - கொந்தளித்த நடிகை அஞ்சலி!

கனவு நனவானது!

அது என்னை வருத்தப்படுத்தியது. கணவர் வந்த பிறகு இந்த பிரச்சனையெல்லாம் மாறிவிட்டது. அவர் என் வாழ்க்கையில் வந்த பிறகு நான் ஒரு தெய்வமாக உணர்ந்தேன். நான் சேலை அணிவது அவருக்குப் பிடிக்கும். என் கணவரைப் போன்ற நல்ல மனிதரை நான் சந்தித்ததில்லை. நான் கர்ப்பமான எட்டாவது மாதத்தில் கருக்கலைப்பு செய்தேன்.

suguna nagarajan

குழந்தை வயிற்றில் இறந்தது. இது எனக்கு தெரியாது மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்றேன். குழந்தையை காட்ட வேண்டாம் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் கணவர் சம்மதிக்கவில்லை. குழந்தையைக் காட்டவில்லை என்றால் கவலைப்படுவேன் என்றார்.

அதன்பின், உனக்கு ஒண்ணும் தேவையில்லை, இல்லத்தரசியாக இருந்தால் போதும் என்றார் கணவர். பின்னர் மகன் பிறந்தான். மேக்கப் கிளாஸ்களில் கலந்துக் கொண்டேன். இதன் மூலம் தனது கனவுகளை நனவாக்க முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.