Thursday, Jun 26, 2025

நடனமாட சொன்னதால் நடிகை ஆண்ட்ரியா கோபம் - ஊ சொல்றியா பாடலால் ரசிகர்கள் உற்சாகம்!

Angry Salem Stage Andriya MusicalArtist
By Thahir 3 years ago
Report

கோவில் திருவிழாவிற்கு வந்த நடிகை ஆண்ட்ரியாவை காண ஏராளமானோர் திரண்டதால் போலீசாருக்கும்,பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மல்லுார் அருகே கோவில் திருவிழா நடைபெற்றது இதில் பிரபல திரைப்பட நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார்.

சேலம் மாவட்டம் தேங்காம்பட்டி பகுதியில் பூவாய் அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருவிழாவில் இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த நடிகை ஆண்ட்ரியாவை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.அப்போது மேடைக்கு வந்த நடிகை ஆண்ட்ரியா புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலை பாடி இசை கச்சேரியை துவக்கி வைத்தார்.

பின்னர் அவரை ரசிகர் நடனமாடச் சொல்லி வற்புறுத்தினர்.அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் விழா குழுவினர் பொதுமக்களையும்,ரசிகர்களையும் அமைதிப்படுத்தினர். ஆண்ட்ரியாவை நடனமாட சொன்னதால் அவர் சிறிது கோபமடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.