ஆந்திராவில் வெடித்த கலவரம் - வேலுாரில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்
Andhra Pradesh
Vellore
By Thahir
வேலுாரில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக வேலுாரில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
மோதல் - பேருந்து சேவை நிறுத்தம்
தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்பட்ட மோதலால் வேலுாரில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இரு கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஆந்திரா, சித்துார் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் - ஆந்திரா இடையே போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.