அமைச்சர் கவுதம் ரெட்டி திடீரென உயிரிழந்தார் - அதிர்ச்சியில் ஆந்திர மக்கள்
ஆந்திர மாநில ஐடி துறை அமைச்சர் கவுதம் ரெட்டி (50) இன்று காலை மாரட்டைப்பால் உயிரிழந்தார். ஆந்திர மாநில ஐ.டி.துறை அமைச்சர் கவுதம் ரெட்டிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸ், அப்பல்லோ மருத்துவமனையில் மயங்கிய நிலையில் காலை 7.45 மணியளவில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகனின் இறந்த செய்தியைக் கேட்ட கவுதம் ரெட்டியின் தந்தை மேகபதி ராஜமோகன ரெட்டி துபாயிலிருந்து தாயகம் திரும்பி இருக்கிறார்.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர்சி கட்சி சார்பில் போட்டியிட்ட கவுதம் ரெட்டி வெற்றி பெற்றார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமைச்சரவையில் இவர் சிறப்பாக பணியாற்றினார்.
அமைச்சர் கவுதம் ரெட்டி மறைவிற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.