குழந்தையின் எதிர்காலத்துக்காக கிட்னியை விற்ற தந்தை - இறுதியில் நேர்ந்த சோகம்

Andhra Pradesh
By Karthikraja Jul 11, 2024 04:31 AM GMT
Report

 பேஸ்புக் விளம்பரத்தை நம்பி வாலிபர் கிட்னியை இழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம்

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மதுபாபு (31) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் குழந்தை உள்ளது. ஆட்டோ ஓட்டுவதன் மூலம் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்ட மதுபாபு, ஆன்லைன் மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். 

lost kidney in facebook ad

இந்நிலையில் ஒரு கிட்னி கொடுத்தால் ரூ. 30 லட்சம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பேஸ்புக்கில் பார்த்துள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த பாஷா என்பவர் தொடர்ந்து கொண்டு 30 லட்சம் தருவதாக உறுதியளித்தார். பாஷா மூலம் இடைத்தரகர் வெங்கட் என்பவர் அறிமுகமானார்.

ஆபரேஷன்

இவர்கள் மதுபாபுவை விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு கிட்னி தேவைப்படும் நோயாளியின் உறவினரை அறிமுகம் செய்து வைத்தனர். நோயாளியின் உறவினர் முன்பணமாக மதுபாபுவிடம் ₹60 ஆயிரம் கொடுத்துள்ளார்.

மீதம் உள்ள ₹29.40 லட்சத்தை ஆபரேஷன் முடிந்ததும் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய மதுபாபுவுக்கு ஜூன் 15ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. முன்னதாக அவரிடம் இடது கிட்னியை அகற்றுவதாக கூறிய நிலையில் வலது கிட்னியை அகற்றப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்த நிலையில் இதையறிந்து மதுபாபு அதிர்ச்சியடைந்தார்.

ஒப்பந்தப்படி தனக்கு தரவேண்டிய ரூ. 29.40 லட்சத்தை பாஷா உள்ளிட்டோரிடம் கேட்டார். அப்போது அவர்கள், `டிஸ்சார்ஜ் ஆகி சென்றபிறகு உங்கள் வீட்டுக்கு வந்து மீதி பணத்தை தருகிறோம்’ என்று கூறியுள்ளனர். ஆனால் பலமுறை கேட்டபிறகு சிறிது சிறிதாக மேலும் ரூ. 50 ஆயிரம் கொடுத்தார்களாம்.

மிரட்டல்

நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு சென்ற மதுபாபு, அங்கிருந்த பாஷா, வெங்கட் மற்றும் டாக்டர் சரத்பாபு ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் கூறியதோடு, `உனது கிட்னியை எடுக்க தெரிந்த எங்களுக்கு, உனது உயிரை எடுப்பது பெரிய விஷயமே இல்லை’ என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாபு, குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

andhra autosdriver lost kidney

இதனால் அதிர்ச்சியடைந்த மதுபாபு, குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து மதுபாபு பேசுகையில், ‘’கிட்னியை விற்பதன் மூலம் ரூ.30 லட்சம் கிடைக்கும் அதன் மூலம் கடனை அடைப்பதோடு, என் குழந்தையின் மற்றும் எதிர்காலத்துக்கு உதவும் என்பதற்காகவே ஒப்புக்கொண்டேன்.ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் என கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும் தன்னைப்போல் அதே மருத்துவமனையில் 10க்கு மேற்பட்டோரை வரவழைத்து கிட்னியை அகற்றி சில ஆயிரம் மட்டுமே கொடுத்து விரட்டுகின்றனர் என கூறியுள்ளார். புகாரின் அடிப்படியில் பாஷா, வெங்கட், டாக்டர் சரத்பாபு மற்றும் நோயாளியின் உறவினர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.