30 அடி ஆழம்; திருமணத்திற்கு சென்ற பேருந்து கோர விபத்து - 7 பேர் துடிதுடித்து பலி!
பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து விபத்து
ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்சி என்ற பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக காக்கிநாடா நோக்கி அரசு சொகுசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநர் எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாலையோரம் திருப்பி உள்ளார். அதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த சாகர் கால்வாயின் 30 அடி ஆழத்தில் கவிழ்ந்தது.
7 பேர் பலி
பேருந்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அதனையடுத்து, மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.