'வாசுகி' 50 அடி நீளம்,1000 கிலோ எடை கொண்ட பாம்பின் படிமம் - அதுவும் இந்தியாவில்!

Gujarat India Snake
By Jiyath Apr 20, 2024 09:03 AM GMT
Report

2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள் பூமியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாம்பாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

படிமப் பொருள்

குஜராத் மாநிலம் கட்சி பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் அருகே, கடந்த 2005ம் ஆண்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமிக்கு அடியில் மிக நீளமான உருவ அமைப்புடன் கூடிய படிமப் பொருள் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதனை உத்தர காண்டில் உள்ள ஐஐடி ரூர்க்கியை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில் படிமப் பொருளாக கருதப்பட்டது பூமியில் இதுவரை இல்லாத மிகப் பெரிய பாம்புகளில் ஒன்று என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம் இதுதான் - ஆச்சரிய தகவல்!

வாசுகி இண்டிகஸ்

இந்த பாம்பிற்கு "வாசுகி இண்டிகஸ்" என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாம்பு 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கட்ச்சின் சதுப்புநிலத்தில் வாழ்ந்ததாகவும், 36 முதல் 50 அடி வரை நீளமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், வாசுகி இண்டிகஸ் தற்போது அழிந்து வரும் டைட்டனோபோவாவை விட அளவில் பெரியதாக இருக்கலாம். இது ஒரு டன் அல்லது 1,000 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.