முடிவுக்கு வரும் அன்புமணி ராமதாஸ் மோதல் - தைலாபுரம் வரும் முக்கிய புள்ளிகள்
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து மோதல் நிலவி வந்தது.
இதனையடுத்து, இனி நானே பாமக தலைவராக செயல்படுவேன், என கூறி விட்டு அன்புமணியின் தலைவர் பதவியை பறித்து விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார்.
சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீதுபல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி தலைமையில் மோதல் ஏற்பட்டது தொண்டர்களிடையே யாரின் தலைமையை பின்பற்றுவது என்ற குழப்பம் நிலவியது.
சமரச பேச்சுவார்த்தை
இந்த சூழலில், தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசியுள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே சமரச பேச்சுவார்த்தை எட்டப்பட்டு, மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் சென்று ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாஜக கூட்டணிக்காக அன்புமணி எனது காலைப் பிடித்தார்.பாமக அதிமுக கூட்டணி அமைந்திருந்தால் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என ராமதாஸ் பேசிய நிலையில், பாஜகவிற்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாஸை சந்தித்து பேசி வருகிறார்.