பாமகவின் துரோகி; அவர்தான் எல்லா பிரச்சனைக்குமே காரணம் - அன்புமணி ஆதங்கம்

Anbumani Ramadoss Dr. S. Ramadoss Tamil nadu PMK
By Sumathi Jun 05, 2025 01:30 PM GMT
Report

அன்பழகனை துரோகி என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கடும் மோதல்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் கடுமையான மோதல் நடந்து வருகிறது. தொடர்ந்து பாமகவில் அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் 31 மாவட்ட நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் அறிவித்தார்.

anbumani ramadoss

மறுபக்கம் அன்புமணி ராமதாஸ் அவர்களை கட்சிப் பதவியில் தொடர்கிறார்கள் என்று அறிவித்தார். இந்நிலையில், அன்புமணி தந்தை ராமதாஸை சந்திக்க தைலாபுரத்திற்கு வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் இருக்கும் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயிடம் மன்னிப்பா? அரைவேக்காடு தவெக தொண்டர்கள் - கொதித்த வேல்முருகன்

விஜயிடம் மன்னிப்பா? அரைவேக்காடு தவெக தொண்டர்கள் - கொதித்த வேல்முருகன்

அன்புமணி ஆதங்கம்

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், உங்களுக்கு இடையில் கோஷ்டி பூசல் இருக்கிறது. அதனை களைந்துவிட்டு கட்சிப் பணிகளை செய்ய வேண்டும். இந்த கோஷ்டிகளுக்கு காரணம் ஒரே நபர் தான். அது யாரென்றால் அன்பழகன் தான்.

பாமகவின் துரோகி; அவர்தான் எல்லா பிரச்சனைக்குமே காரணம் - அன்புமணி ஆதங்கம் | Anbumani Ramadoss Blames Anbazhagan

15 ஆண்டுகளுக்கு முன்பாக அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். பின்னர் மீண்டும் வந்து ராமதாஸ் காலினை பிடித்து பொறுப்பு வாங்கினார். பின் மாவட்டச் செயலாளர் பதவியை விற்க தொடங்கி, சமுதாயத்தை அழித்து வந்தார். இதனை நினைத்தால் வருத்தமாக உள்ளது. கட்சியின் துரோகி, சமுதாயத்தின் துரோகி அவர்.

நான் ஏதாவது செய்ய வேண்டுமென்றால், ஒரு நபர் கூடவே இருக்கிறார். வயிறெச்சலில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அமைதியாக இருக்கிறேன். மனதில் நிறைய உள்ளது. நிர்வாகிகள் தைரியமாக இருங்கள்.. அனைவருக்கும் பொறுப்பு, பதவி என்று என்ன செய்ய வேண்டுமோ, அதனை நிசச்யம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.