+2 தேர்வு தொடங்கியது - சென்னை சந்தோமில் உள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

By Nandhini May 05, 2022 05:37 AM GMT
Report

இன்று பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறைக்கு வந்தனர்.

இத்தேர்வு வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

பொதுத் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைய உள்ளது. அடுத்ததாக வருகிற 9-ம் தேதி (திங்கட்கிழமை) ஆங்கில தேர்வு நடைபெற உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடக்க உள்ளது.

இந்நிலையில், சென்னை, சாந்தோமில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். 

+2 தேர்வு தொடங்கியது - சென்னை சந்தோமில் உள்ள தேர்வு மையத்தை பார்வையிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் | Anbil Mahesh