பெங்களூர் மருத்துவமனையில் அன்பில் மகேஷ்...மருத்துவமனையில் குவிந்த திமுகவினர்
தமிழகத்தின் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷ்
தமிழகத்தின் இளம் அமைச்சர்களில் மிகவும் கவனம் பெறுபவர் அன்பில் மகேஷ். திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகனான இவர் தற்போது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக செயல்பட்டு வருகின்றனர்.
இன்று நாங்குநேரி விவகாரம் பெரும் அதிர்வலையில் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் கல்வி செலவை முழுமையாக ஏற்று கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.
திடீர் உடல்நல கோளாறு
இந்நிலையில், தான் அவருக்கு தற்போது திடீரென அஜீரண கோளாற மற்றும் வாயுத்தொல்லை ஏற்பட அவர் தஞ்சாவூர் காரிமங்கலத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் புறப்பட போது அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவர் காரில் பெங்களுர் அழைத்துச்செல்லப்பட்டு அங்குள்ள ஹிருதயாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, மருத்துவமனை வளாகத்தில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.