முகேஷ் அம்பானியின் மகனுக்கு ஒரு மாதத்திற்குள் 2வது முறை நிச்சயதார்த்தம் - பின்னணி!
கடந்த மாதமே நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மீண்டும் செய்யப்பட்டது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளது.
நிச்சயதார்த்தம்
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட் இருவருக்கும் டிசம்பர் மாதம்
ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இரு குடும்பத்தின் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்போது இரு குடும்பத்தினரும் ஆலயத்தில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தத்தை நடத்தி குடும்ப விழாவாக முடித்துக் கொண்டனர்.
2வது முறை?
இந்நிலையில், மும்பையில் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில் மீண்டும் பிரம்மாண்டமாக அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த விழா நடந்தது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பங்கள் என்பதால், தங்கள் செல்வாக்கையும் ஆடம்பரத்தையும் காட்டுவதற்காக இப்படி செய்யலாமா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.