மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமனம்
மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Government appoints Dr V. Anantha Nageswaran as the Chief Economic Advisor and today, he has assumed charge.
— Ministry of Finance (@FinMinIndia) January 28, 2022
Read more ➡️ https://t.co/P9biWukHQD pic.twitter.com/fkiW5WgmUr
ஏற்கனவே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் பகுதி நேர உறுப்பினராக 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ள இவர் ஐஐஎம் அகமதாபாத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.
மேலும், ஆனந்த் நாகேஸ்வரன் அமெரிக்காவின் மசஜூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டரல் பட்டம் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியமைச்சகத்தின் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் உடனடியாக தனது பணியில் இணைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.