‘’ போடா டேய் தமிழ் டா ‘’ : வைரலான ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்

viral tweet anandamahindra podadei
By Irumporai Jan 17, 2022 07:02 AM GMT
Report

பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பொங்கலன்று தான் கற்றுக்கொண்ட முதல் வார்த்தை குறித்து ட்வீட் போட்டது தற்போது வைரலாகிவருகிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராகத் திகழ்ந்துவருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். 

இந்த நிலையில் தமிழர்களின் பொங்கல் விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.  

ஆனந்த் மஹிந்திரா, அந்த ட்வீட்டில் தமிழ் மொழி குறித்துக் குறிப்பிட்டிருந்தார். அதில் அவர், ``நான் பள்ளிப் படிப்பைத் தமிழகத்தில்தான் முடித்தேன். ஆனால் தமிழில் நான் கற்றுக்கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது.

அந்தச் சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் சத்தமாகவும் , சில சமயங்களில் மனதுக்குள்ளும் சொல்லியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் தமிழ் மொழி ஓர் ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது, `உங்களது பேச்சைக் கேட்கவும் , உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் எனக்கு நேரமில்லை அதனால் என்னை விடுங்கள்’ எனச் சொல்வதற்கு, தமிழில் எளிதாக `போடா டேய்’ எனச் சொன்னால் போதும் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த `போடா டேய்...’ என்ற வார்த்தையை நெட்டிசன்கள் வைரலாக்கிவருகின்றனர்.