ஒரு கார்ட்டூனை பார்த்து, அதிர்ச்சி அடைந்து செல்போனை தூர வைத்த ஆனந்த் மகிந்திரா - வைரலாகும் பதிவு...!

Anand Mahindra Viral Photos
By Nandhini Dec 01, 2022 01:31 PM GMT
Report

ஒரு கார்ட்டூனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த ஆனந்த் மகிந்திரா செல்போனை தூர வைத்தார்.

ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் வலம் வருபவர் ஆனந்த் மகேந்திரா. இவர் எப்போதும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

தன் மனதில் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறுவார். தன் மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டும் குணமுள்ளவர். இவரது டுவீட்களுக்கு இணையதளத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கோவையைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளிக்கு கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் வீடு கட்டி கொடுத்தார் ஆனந்த் மகேந்திரா.

anand-mahindra-viral-twitter

செல்போனை தூர தூக்கி போட்ட மகேந்திரா

இந்நிலையில், ஆனந்த மகேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், அந்த கார்ட்டூனில் காப்பகத்தில் முதியோர் சிலர் இருக்கின்றனர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., வீடியோ என பதிவிட்டு அந்த காலங்களை கடந்த பின்னரான முதியவர்கள் அவர்கள். வயது முதிர்ந்த பின்னர், அவர்கள் மொபைல் போனை பிடிக்கும்போது எப்படி இருப்போமோ, அதனை போன்றே உடல் முன்னோக்கி வளைந்து காணப்படுகின்றனர்.

இது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது என வேதனை தெரிவித்துள்ள அவர், இந்த டுவிட்டை பதிவிட்ட பின்னர் தனது மொபைல் போனை தூர வைத்து விட்டேன். இந்த ஞாயிற்று கிழமை எனது கழுத்து நேராக இருக்கும்படியும் மற்றும் தலை மேல்நோக்கி நிமிர்ந்து இருக்கும்படியும் பார்த்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.