பிரக்ஞானந்தாவிற்கு காஸ்டலி கார் பரிசு தந்த ஆனந்த் மகேந்திரா....எவ்வளவு விலை தெரியுமா?
உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை சென்ற தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா கஸ்டலி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
பிரக்ஞானந்தா
உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் போட்டியில் விளையாட தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா தேர்வாகினார். அவர் உலக செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.
ஒட்டுமொத்த உலகத்தின் தன் பக்கம் திருப்பிய 18 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா, இந்த போட்டியில் சிறப்பாகவே செயல்பட்டார். இருவருக்கும் இடையேயான முதல் இரண்டு ஆட்டங்கள் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதற்கன டை பிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது. ரேபிட் முறையில் நடைபெற்ற இரண்டு ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆனந்த் மகேந்திராவின் Gift
தோல்வியடைந்தாலும் அனைவரது பாராட்டுகளையும் பிரக்ஞானந்தா பெற்று வருகின்றார். அந்த வகையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசாக அளிக்கவுள்ளதாகவும் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பிரக்ஞானந்தாவுக்கு பலரும் மஹிந்திரா தார் காரை பரிசளிக்க வேண்டும் என கோருகிறார்கள் என்றும் அவர்களது உணர்வு தனக்கு புரிகிறது என குறிப்பிட்டு, வீடியோ கேம்களின் மோகம் அதிகரித்துள்ள போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்கள் இந்த விளையாட்டை தொடர அவர்களுக்கு ஆதரவளிப்பதை ஊக்குவிப்பதை விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Appreciate your sentiment, Krishlay, & many, like you, have been urging me to gift a Thar to @rpragchess
— anand mahindra (@anandmahindra) August 28, 2023
But I have another idea …
I would like to encourage parents to introduce their children to Chess & support them as they pursue this cerebral game (despite the surge in… https://t.co/oYeDeRNhyh pic.twitter.com/IlFIcqJIjm
இது எலெக்ட்ரிக் கார்களைப் போலவே நமது கிரகத்திற்கும் சிறந்த எதிர்காலத்திற்கான முதலீடு. எனவே, பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்.யூ.வி 400 இ.வி காரை பரிசளிக்க வேண்டும் என்று நினைப்பதாக பதிவிட்டு, பிரக்ஞானந்தாவின் பெற்றோர் நாகலட்சுமி, ரமேஷ்பாபு ஆகியோர் தங்கள் மகனின் ஆர்வத்தை வளர்த்ததற்காகவும், அயராத ஆதரவை வழங்கியதற்காகவும் அவர்கள் நம் நன்றிக்கு உரியவர்கள்.” என பதிவிட்டுள்ளார்.இந்த காரின் விலை மட்டும் 15 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.