ஓயாத துயரம்...ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்

Madhya Pradesh
By Thahir Dec 07, 2022 03:43 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் 8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 

மத்திய பிரதேச மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் 8 வயது சிறுவன் தனது வீட்டிற்கு பக்கத்தில் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

அப்போது அந்த பகுதியில் சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்துள்ளார். சிறுவனை பெற்றோர் தேடிய போது ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஓயாத துயரம்...ஆழ்துளை கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம் | An 8 Year Old Boy Fell Into A Borewell

பின்னர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 55 அடி ஆழத்தில் சிறுவன் இருப்பதால் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.