குழந்தை பெற்றபின் கழட்டிவிட்டாச்சு..3வது திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை..!
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் 3-வது முறையாக திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்தியாவில் அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்த பிறகு லண்டனுக்கு சென்று செட்டிலானார்.
அங்கு திரைப்படங்களை தவிர்த்து வெப் தொடர்களில் நடித்து வந்தார். பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
பின்னர் அவரிடமிருந்து பிரிந்து லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதாரத்தமும் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு முன்பே ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார் எமி ஜாக்சன்.அதன் பின் ஜார்ஜையும் பிரிந்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட்டிக்கும் எமி ஜாக்சனும் காதலிப்பதாக தகவல் வெளியானது.
இருவரும் ஜோடியாக சுற்றி திரியும் புகைப்படங்கள் வெளியானது தற்போது முறைபடி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.