2 வயது சிறுவனின் மூளையை சாப்பிட்ட அமீபா - பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்..!

United States of America Death
By Thahir Jul 22, 2023 06:41 AM GMT
Report

அரிய வகை நோயாக கருதப்படும் மூளையை தின்னும் அமீபா நோய் வேகமாக பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது.

எச்சரிக்கும் மருத்துவர்கள் 

இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகளை நேரடியாக தாக்குகிறது. இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏரி, குளம் போன்றவற்றில் வாழும் அமீபா மூலம் இந்த நோய் பரவுகிறது. அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் போது மூக்கு வழியாக அமீபா உடலுக்குள் சென்று விடும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வாந்தி, துாக்கமின்மை, கடுமையான தலைவலி, சுவையில் மாற்றம், கழுத்து வலி, மாறுபட்ட மனநிலை போன்றவை ஏறபடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 வயது சிறுவன் உயிரிழப்பு 

இந்த நிலையில், அமெரிக்காவில் பாதிக்கப்பட்ட நிவேடா என்ற பகுதியைச் சேர்ந்த உட்ரோ டர்னர் என்ற 2 வயது சிறுவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Amoeba ate the brain of a 2-year-old boy

அங்கு அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்தான்.

இது குறித்து அவனது தாய் பிரியனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் வெளியிட்டு உள்ளார். கடந்த 7 நாட்களாக அமீபா நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், தனது மகன் தான் எனக்கு ஹீரோ என்றும் உருக்கமாக அவர் தெரிவித்து உள்ளார்.