ஜெயலலிதாவின் விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் வெற்றி நிச்சயம் : டிடிவி தினகரன்
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆய்வு செய்தார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் எதுவும் செய்ய முடியாது. அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடிய வில்லை.
ஓரணியில் திரளவேண்டும்
நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததை போல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா ? இவர் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர்.
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால் தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் கூறினார்.