மொழிகளை இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் - உதயநிதி காட்டம்!!

Udhayanidhi Stalin Amit Shah Tamil nadu DMK BJP
By Karthick Sep 14, 2023 11:21 AM GMT
Report

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ன உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தி திவாஸ் கொண்டாட்டம் 

இந்தி தினமான இன்று இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி திவாஸாக கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி உள்ளது என்று கூறி, சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி உள்ளது என தெரிவித்தார். 

amit-shah-should-stop-hindi-impositon-says-udhay

வட இந்தியாவையும், தென் இந்தியாவையும் இணைக்கப் பயன்பட்டிருக்கிறது என குறிப்பிட்ட அமித் ஷா, இந்தி எந்த ஒரு மொழிக்கும் போட்டி மொழி கிடையாது என தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கள் பெரும் எதிர்ப்புகளை ஈர்த்து கொண்டிருக்கிறது.

உதயநிதி கண்டனம்

குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் இது பெரும் கண்டனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார் என குற்றம்சாட்டி இருக்கிறார்.

amit-shah-should-stop-hindi-impositon-says-udhay

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து என விமர்சித்த உதயநிதி, தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம் என இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? என்றும் எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? என்று வினவியுள்ளார்.

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது என சுட்டிக்காட்டி இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.