ஒரு பாம்புக்காக வீட்டையேவா கொளுத்துறது? அமெரிக்காவில் நடந்தேறிய சம்பவம்
அமெரிக்காவின் மேரிலேண்டு மாகாணத்தில் 10 ஆயிரம் சதுர அடியில், இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய் தொழிலதிபர் ஒருவர் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார்.
ஆடம்பரமாக கட்டப்பட்ட அந்த சொகுசு வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் வாழ்ந்து வந்த நிலையில் அவ்வப்போது அழையா விருந்தாளிகளாக வீட்டிற்குள் பாம்புகள் வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் அச்சம் அடைந்த அந்த வீட்டு உரிமையாளர்கள் பாம்புகள் வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பாம்புகள் வந்து செல்வது தொடர்ந்துக்கொண்டே இருந்துள்ளது.
இந்நிலையில் வழக்கத்தை போல பாம்பு ஒன்று அவருடைய வீட்டுக்குள் ஒளிந்துகொண்டதை தொடர்ந்து பாம்பை விரட்டுவதற்காக நிலக்கரியை வைத்து வீடு முழுக்க புகை போட்டுள்ளார் உரிமையாளர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் வீடு பற்றிக் கொண்டது.
இதனால் தொழிலதிபதிர் திகைத்துப் போய் விட கண் இமைக்கும் நேரத்தில் வீட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவிவிட்டது.
ஒட்டுமொத்த வீடும் எரிந்து சாம்பலாகவே இந்த சம்பவம் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீடு எரிந்து சாம்பலான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Update (11/23 10p) 21000blk Big Woods Rd, Dickerson/Poolesville, @mcfrs Media Hotline Update 240.777.2442 - no injuries, Cause-undetermined/under investigation, >$1M loss, ~75FFs responded, it was dark & cold (~ 25°) https://t.co/6PwIkbRAkf pic.twitter.com/jWlB1HPdKt
— Pete Piringer (@mcfrsPIO) November 24, 2021