ஆல்யா மானசாவிற்கு 2-வது குழந்தை பிறந்தது - குவியும் வாழ்த்துக்கள்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர்தான் ஆல்யா மானசா. இவர் அடிப்படையில் ஒரு டான்சர். ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார்.
செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு Aila Syed என்ற பெண் குழந்தை உள்ளது, சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார் ஆல்யா. கர்ப்பமாக இருக்கும்போதே சீரியலில் நடித்து வந்த அவர் திடீரென்று சீரியலிலிருந்து விலகினார்.
தற்போது, ஆல்யா மானசாவிற்கு 2வதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆல்யா மானசா தனது இன்ஸ்டா பக்கத்தில் 2-வது குழந்தையை சஞ்சீவ் கையில் வைத்திருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர்களது ரசிகர்கள் ஆல்யா மானசாவிற்கும், சஞ்சீவ்விற்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம் -