2 மாசத்துல முடிஞ்சிரும் - பாஜகவுடன் கூட்டணியா..? சட்டென பதிலளித்த டிடிவி
பாஜக அதிமுக கூட்டணி முறிந்து நிலையில், பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்.
டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு
நேற்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தது தான் உண்மையான அண்ணா திமுக என கூறி, தற்போதுள்ளது களவாடப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி இருக்கிறார் என குற்றம்சாட்டினார்.
முன்னர் பாஜக ஜெயலலிதா பற்றி பேசிய போது அதிமுக அமைதியாக இருந்தனர் என சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், டெல்லிக்கு பேசிய பிறகு, ஏதோ ஏமாற்றத்துடன் திரும்பி இருப்பதாக தெரிகிறது என தனது விமர்சனத்தை முன்வைத்த டிடிவி, அந்த ஏமாற்றத்தின் காரணமாக தான், அண்ணாவை பற்றி பேசிவிட்டார்கள் - கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என காரணம் கூறுகிறார்கள் என தெரிவித்தார்.
எடப்பாடி ஏமாற்றுக்காரர்
4 ஆண்டுகள் ஆட்சிக்கு உதவிய பன்னீர்செல்வத்தையும், சசிகலாவிற்கும் நன்றி இல்லாமல் இருந்த எடப்பாடி பழனிசாமியின் குணத்தை பாஜக தற்போது தான் புரிந்துகொண்டுள்ளது என தெரிவித்து, துரோக சிந்தனை உள்ளவர்கள் எல்லோரையும் ஏமாற்றுவார்கள் என்றும் துரோகம் என்பது எடப்பாடி பழனிசாமி ரத்தத்திலேயே உள்ளது என தெரிவித்து அவர் ஏமாற்றுக்காரர் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், பாஜகவில் கூட்டணிக்கு இருந்து அழைப்பு வந்ததா? கூட்டணியில் இணைவீர்களா? என கேள்விகள் கேட்கப்பட்ட போது, யூகங்களுக்கு இந்த நேரத்தில் பதில் சொல்ல தான் விரும்பவில்லை என தெரிவித்து சரியான நேரத்தில் சரியான முடிவை அமமுக எடுக்கும் என கூறி சென்றார்.