சென்னையில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் - கல்வித்துறை அறிவிப்பு

Tamil nadu Chennai
By Thahir Mar 10, 2023 11:23 AM GMT
Report

சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு.

நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் 

நாளை (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கள் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னையில் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் - கல்வித்துறை அறிவிப்பு | All Schools In Chennai Will Function As Usual

மேலும், 13ம் தேதி தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.