இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி - 23-ந் தேதி கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்..
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு வரும் 23-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் கடுமையாக சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ள நிலையில்,மின் வெட்டும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.283-க்கும் டீசல் விலை ஒரு லிட்டர் 176 - ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் எரிபொருள் பற்றாக்குறையால் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 23-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளது.
இந்த கூட்டத்தில் ஜனதிபதி கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே
மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளனர்.