நம்ப வைத்து ஏமாற்றிய இயக்குநர் ராஜமௌலி ... கோபத்தில் கடுப்பான ஆலியா பட்

RRR aliabhatt ssrajamouli Ramcharan
By Petchi Avudaiappan Mar 30, 2022 05:14 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிரபல நடிகை ஆலியா பட் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியை சமூக வலைதளங்களில்  பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய சினிமாவின் அடையாளமாக கருதப்படும் இயக்குநர்களில் ஒருவரான ராஜமௌலி சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரபல நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 

இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனாலும் உலகளவில் வசூலில் ரூ.500 கோடியை கடந்து இப்படம் சாதனைப் படைத்துள்ளது. 

இதனிடையே  ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் செம கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் தான் சம்பந்தப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை என கடுப்பான ஆலியா பட் ராஜமௌலியை சமூக வலைத்தளங்களில் பின்தொடருவதை நிறுத்தியுள்ளார். 

ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர்களையெல்லாம் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஆலியா பட்.நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.