தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாலிவுட்டில் கால்பதிக்கும் முன்னணி பிரபலம்
ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருபவர் ஆலியா பட்.
ராசி,கலன்க், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல சூப்பர் ஹிட் பாலிவுட் படங்களில் நடித்துள்ள ஆலியா தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படம் கடந்த மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகி உள்ள 'ஆர்ஆர்ஆர்’படத்திலும் ஆலியா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகைகள் தீபிகா படுக்கோன், பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூரை தொடர்ந்து ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ‘வொண்டர் வுமன்’ படத்தில் நாயகியாக நடித்த கல் கடோட் மற்றும் ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளார்.
படத்திற்கு 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் படமாக தயாராகும் இந்த படத்தை டாம் ஹார்பர் இயக்க ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
