திருமணமான 5-வது நாளே ஆலியா பட்- ரன்பீர் இடையே பிரிவா? - அதிர்ச்சியான ரசிகர்கள்

marriage Ranbir Kapoor AliaBhatt திருமணம் ஆலியாபட் ரன்பீர்
By Nandhini Apr 20, 2022 07:55 AM GMT
Report

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கடந்த 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்களது குடியிருப்பில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பாலிவுட் பிரபலங்கள் சிலரை அழைத்து எளிமையான முறையில் இவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

ஆனால், திருமணம் முடிந்த 5வது நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுவிட்டாராம் ஆலியா பட். ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்து வருகிறார் ஆலியா பட். திருமணத்திற்காக ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்தாராம். இதையடுத்து, அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். 

மும்பை விமான நிலையத்தில் ஆலியாவை பார்த்த மக்கள் அனைவரும் வியந்து விட்டனர். என்னடா... திருமணம் முடிந்து தேனிலவுக்கு கணவருடன் செல்வார்ன்னு பார்த்தா.. இப்படி தனியாக படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டாரே என்று கூறியுள்ளனர்.

கணவர் ரன்பிர் கபூரோ திருமணமான 3வது நாளே வேலைக்கு சென்றுவிட்டார்.   

திருமணமான 5-வது நாளே ஆலியா பட்- ரன்பீர் இடையே பிரிவா? - அதிர்ச்சியான ரசிகர்கள் | Alia Bhatt Ranbir Kapoor Marriage Divorce