IPL 2024: சவாலாக இருக்கும்.. இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - பிரபல வீரர் கணிப்பு!

Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Apr 03, 2024 09:01 AM GMT
Report

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து கிரிக்கெட் வீரர் ஆல்பி மார்க்கல் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 கடந்த 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த மூன்று இடங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

IPL 2024: சவாலாக இருக்கும்.. இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - பிரபல வீரர் கணிப்பு! | Albie Morkel Predicts Who Win Ipl 2024

ஆனால், இந்த தொடரில் 10 அணிகளுமே நல்ல பலத்துடன் இருப்பதால் யார் கோப்பையை வெல்வார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே வீரருமான ஆல்பி மார்க்கல் கருத்து தெரிவித்துள்ளார்.

எந்த அணி வெல்லும்?

அவர் கூறியதாவது "நடப்பு ஐபிஎல் தொடர் கடும் சவால்களை அனைத்து அணிகளுக்கும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மற்ற சீசன்களை விட இம்முறை அனைத்து அணிகளுமே அபாயகரமான அணியாக விளங்குகிறது.

IPL 2024: சவாலாக இருக்கும்.. இந்த அணி தான் கோப்பையை வெல்லும் - பிரபல வீரர் கணிப்பு! | Albie Morkel Predicts Who Win Ipl 2024

இதன் காரணமாக இந்த தொடர் பல சவால்களை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் ஒரு கம்பேக்கை கொடுப்பார்கள்.இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது" என தெரிவித்துள்ளார்.