நடிகர் அக்‌ஷய் குமாருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி

Indicom COVID-19 Akshay Kumar
By Irumporai May 15, 2022 06:10 AM GMT
Report

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வார தொடக்கத்தில் நடைபெற உள்ள கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா , உள்ளிட்ட பல நடிகர்களோடு நடிகர் அக்‌ஷய் குமாரும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தான் நடிகர் அக்‌ஷய் குமார் கோரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கிறார் அவ்வப்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்பதை தவிர்க்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அதில் அவர் நான் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி என்னை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். தொற்றிலிருந்து விடுபட்டு மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்புவேன் உங்கள் பிரார்த்தனை மற்றும் அன்புகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.