சம்பளமே வாங்காமல் அஜித் செய்த செயல்; அதுவும் விஜய் படத்திற்காக - என்ன கரணம்?

Ajith Kumar Vijay Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Apr 14, 2024 07:13 AM GMT
Report

‘ராஜாவின் பார்வையிலே’ படத்திற்காக நடிகர் அஜித் சம்பளம் வாங்கவில்லை என்று தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விஜய்-அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்களது ரசிகர்களுக்கு இடையேயான மோதல் என்பது இன்றுவரை தொடர்ந்து வருகிறது.

சம்பளமே வாங்காமல் அஜித் செய்த செயல்; அதுவும் விஜய் படத்திற்காக - என்ன கரணம்? | Ajith Refused To Get Salary In Rajavin Parvayile

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதேபோல் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார். அஜித் மற்றும் விஜய் ஆகியோர் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் சாத்தியம் இல்லாத ஒரு விஷயம் தான்.

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

எய்ட்ஸ் நோய்.. எலும்பு தெரிய தர்கா வெளியில் கிடந்த நடிகை - சோகமான இறுதி நாட்கள்!

சம்பளம் வாங்கவில்லை   

ஆனால் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் விஜய்-அஜித் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம்.

சம்பளமே வாங்காமல் அஜித் செய்த செயல்; அதுவும் விஜய் படத்திற்காக - என்ன கரணம்? | Ajith Refused To Get Salary In Rajavin Parvayile

ஏனெனில் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் அவரது தம்பியின் மேல் வைத்திருந்த நல்ல நட்பின் காரணமாக நடிகர் அஜித் இந்த படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட வாங்காவில்லை. இதனை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் பகிர்ந்துள்ளார்