அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் அஜித் - மேலாளர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி

valimai jayalalithaa ajithkumar அஜித்குமார்
By Petchi Avudaiappan Mar 01, 2022 06:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித்குமார் அரசியிலில் ஈடுபடவுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார் அவ்வப்போது எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் திரையுலகில் பேசுபொருளாக மாறுவது வழக்கம். ரசிகர் மன்றங்களை கலைத்தது, வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்களை கண்டித்தது என பல ரகங்கள் இதில் உண்டு. 

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த படம் வசூலிலும் பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் இதில் தாய் பாசம் பற்றிய பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 

வலிமை படமானது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியானதும், படத்தில் தாய் பாசம் பற்றிய பாடல் ஜெயலலிதா நினைவு நாளிலும் வெளியானதால் அஜித் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் அஜித்குமார் மனதளவில் மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக் கொண்டவர் என்றும், ஜெயலலிதாவின் மேலளார் பூங்குன்றன் சங்கரலிங்கம் அஜித் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் தெரிவித்திருந்தது மேலும் பரபரப்பை கூட்டியது. 

இந்நிலையில் இத்தகைய வதந்திகளுக்கு அஜித்தின்  மேலாளர் சுரேஷ் சந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மதிப்பிற்குரிய ஊடகவியலாளர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.