ரசிகர்களின் ஆசையில் மண்ணள்ளி போட்ட அஜித் : வெளியான அதிர்ச்சி தகவல்
துணிவு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
துணிவு
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் துணிவு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நிகழ்ச்சியில் நடிகர் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக இணையத்தில்செய்திகள் வெளியாகின .
ஆகவே பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அஜித் பட புரமோஷனில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர் .
ரசிகர்கள் சோகம்
இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பதிவில் ஒரு நல்ல படம் அதற்கான விளம்பரத்தை அதுவே தேடிக்கொள்ளும் என்று அஜீத் கூறியதாக பதிவிட்டுள்ளார்.
"A good film is promotion by itself!! - unconditional love!
— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022
Ajith
இதன் மூலம் துணிவு பட புரமோஷனில் அஜித் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது இதனால் அஜித் இதனால் அஜீத் ரசிகர்கள் கடும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்